எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்குத் தற்காலிக தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும் என அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் சரக்கு விமானங்களின் சேவை தொடரும் என்பதோடு, சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.


