சசிகலாவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின்

395 0

1470077403-0211ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக சசிகலாவை அடுத்த பொதுச் செயலாளராக்க வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

அமைச்சர்கள், மூத்த நிரவாகிகள் உட்பட பலரும் சசிகலாவை சந்தித்து பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று தமிழ்நாட்டின் பல்கலைகழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர்.

இதனை வன்மையாக கண்டித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் முகஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அதில், பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக் கழக துணைவேந்தர்கள் போயஸ் தோட்டம் சென்று அரசு பொறுப்பில் இல்லாத திருமதி சசிகலாவை சந்தித்துள்ளது அந்தப் பதவிக்குரிய கண்ணியத்தையும் மாண்பையும் கெடுத்து விட்டது.

அதுவும் சசிகலா நடராஜன் அதிமுக கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இவர்கள் கூறியிருப்பது துணை வேந்தர்கள் அரசியல்வாதிகளாகி விட்டதை அப்பட்டமாக காட்டுகிறது.

எனவே மாண்புமிக்க துணை வேந்தர் பொறுப்பை அரசியலாக்கும் நோக்கோடு செயல்பட்ட துணை வேந்தர்களை உரிய பணியாளர் சட்டங்களின்படி பதவி நீக்கம் செய்து, நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் பயிலும் ‘உயர்கல்வியின் தரத்தை’ பாதுகாக்குமாறு மாண்புமிகு ஆளுநர் அவர்களை கடிதம் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

625-0-560-350-160-300-053-800-668-160-90

625-0-560-350-160-300-053-800-668-160-90-1