நியூஸிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கையை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது.
தென் ஆக்லாந்து பகுதியில் இன்று ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
குறித்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த கைலாஸ் தனபாலசிங்கம் என்பவரின் ஐந்து வயது மகன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைலாஸை காப்பாற்ற வைத்தியர்கள் போராடி வருகின்றனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான கைலாஸ் தனபாலசிங்கம் தற்போதுவரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.