‘இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்னும் தலைப்பிலான சர்வதேச பயிற்சிப்பட்டறையொன்று மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் இன்று ஆரம்பமானது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பவியல் நிறுவனம் ஆகியன இணைந்து நடாத்திய குறித்த பயிற்சிப் பட்டறை இரு அமர்வுகளாக நடைபெறுவதுடன், முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது.
மட்டக்களப்பு கோவில் குளத்திலுள்ள உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் நடைபெற்ற சர்வதேச பயிற்சிப்பட்டறைக்கு, நிறுவனத்தின் கல்விசார் இணைப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
இப்பயிற்சிப்பட்டறையின் முதலாவது அமர்விற்கு பிரதம அதிதியாக, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக அமெரிக்காவிலிருந்து தமிழ் இணையத்துறை முன்னோடி உத்தமம் நிறவனத்தின் உபதலைவர் சுகந்தி நாடார், இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.நசீர் ஆகியோரும், விசேட அதிதிகளாக திருகோணமலை மற்றும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவக பணிப்பாளர் ஜெ.பிரதீபன், மட்டக்களப்பு அரிமா சங்கத்தின் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள மாணவர்களும், கல்வி வலயங்களில் தகவல் தொழில்நுட்பத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

