மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும்- வஜிர அபேயவர்தன

293 0

mavirar11-720x480மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் பூநகரி பிரதேச செயலக கட்டடத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் வஜிர அபேயவர்;தன இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வஜிர அபேயவர்தன,சிலர் மாவீரர்தினம் அனுஸ்டிப்பது தொடர்பில் கவலைப்படுகின்றார்கள்.மாவீரர் தினத்தை கொண்டாட முடியும்.

71ஆம் ஆண்டு, 87 மற்றும் 88ஆம் ஆண்டுகளில், தெற்கில் இடம்பெற்ற கலவரங்களின் போது ஏற்பட்ட இழப்புக்கள் மற்றும் இறந்தவர்களையும் நினைவு கூருகின்றனர்.எமது மதத்தின்படி இறந்ததன் பின்னர், அனைத்து உறவுகளுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்.இறந்ததற்குப் பிறகு நல்லவனா, கெட்டவனா, என்பதெல்லாம் தேவையில்லை.

அனைத்து மனிதர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்றே எமது மதம் எமக்கு  சொல்கிறது.இந்தப் பிரச்சனைகளை பொலிசார்  மீதோ,  முப்படைகளின்  மீதோ, இராணுவ  அமைப்புக்களின்  மீதோ,  அல்லது அரசியல்வாதிகளின் மீதோ திணிப்பது  நல்லதல்ல.உண்மையில் நாங்கள் மனிதாபிமானத்துடன்  செயற்பட வேண்டும்.என்று மேலும் குறிப்பிட்டார்.