மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை

347 0

sand_1605392f_2899408gமணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மணலுக்கான புதிய கட்டண அறவீடு, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் அறிவித்துள்ளது.

மணல் கியூப் ஒன்றின் அரச விலையானது, தற்போது 4 ஆயிரம் ரூபாய் என்று கணிப்பிட்டு, அரச ஆதாய உரிமைக் கட்டணமாக 160 ரூபாய் அறவிடப்படுகின்றது என்று, பணியகத்தின் தலைவர் கித்சிறி திஸாநாயக்க தெரிவித்தார்.

மணல் கியூப் ஒன்றுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணம் போதுமானது அல்ல.

இக்கட்டணமானது 2007ஆம் ஆண்டே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மணல் கியூப் ஒன்றின் விலையானது 4 ஆயிரம் ரூபாவாக கணிக்கப்பட்டிருந்த போதிலும், சில பிரதேசங்களில் மணல் கியூப் ஒன்று 18 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகைக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக, அரச மணல் கியூப் ஒன்றின் விலையை 8 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிகரித்து, அரச ஆதாய கட்டணமாக 320 ரூபாயாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கித்சிறி திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.