உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாது – மைத்திரிபால சிறிசேன

286 0

949220318untitled-1உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய இராணுவப் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

தான் எவ்வேளையிலும் இராணுவத்தினருக்காக முன்நிற்பதாக இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.அரச தலைவர் ஒருவரை சந்திப்பதற்கு தமக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவென இராணுவ சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.