தமிழர் விடுதலை முன்னணி எனும் பெயரில் புதிய கட்சி -விஜயகாந்த்!

273 0

captureதமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவோம் என மார்தட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மௌனித்துப் போய்க்கொண்டிருப்பதால், எமது மக்களை வழிநடத்த புதிய தலைமையொன்று உருவாக்கவேண்டிய தேவையுருவாகியுள்ளதாக அனைத்துலக எம்.ஜி.ஆர்.பேரவையின் தலைவர் பொன்மதிமுகராஜா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கம் எமக்கு நன்மைகள் செய்யும் என எதிர்பார்த்தபோதும் தமிழர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

அதேபோல் தமிழ் மக்களுக்கு 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக மார்தட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மௌனித்துக்கொண்டு செல்கின்றது.இவ்வாறான நிலையில், எமது மக்களை வழிநடாத்த புதிய தலைமை தேவைப்படுகின்றது. நாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வையும், ஏனைய உரிமைகளையும் தார்மீக வழியில் நின்று பெற்றுக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளோம்.

இதற்கமைய, தமிழர் விடுதலை முன்னணி எனும் பெயரில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி தமிழக முதல்வரும் புரட்சித் தலைவருமான எம்ஜிஆர் பிறந்த தினத்தில் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.