மீனவர்கள் தொடர்பில் தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம்

313 0

panneerselvamcதமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றமையை கண்டித்து, இலங்கை அரசாங்கத்துக்கு கடுமையான செய்தியை அனுப்புமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பில் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் நேற்றைய தினம் நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்தே அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கச்சத்தீவு தொடர்பில் இந்தியாவுக்கு உள்ள இறைமையை பாதுகாக்குமாறும் அவர் தமது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.