ஜேர்மனியில் பேர்லின் நகரில் நேற்று இடம்பெற்ற பாரவூர்தி தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைக் கோரியுள்ளனர்.
அங்குள்ள கிறிஸ்ட்மஸ் அங்காடி ஒன்றினுள் பாரவூர்தி ஒன்று செலுத்தப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 12 பேர் பலியானதுடன், 49 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த அகதி, உண்மையான குற்றவாளி இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கின்றனர்.
எனினும் இதனை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.