வவுனியாவில் வெடிபொருட்களுடன் மூவர் கைது(காணொளி)

314 0

vavuniya-vedyவவுனியாவிற்கு கொண்டு வர தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரமின்றி மதவாச்சியிலிருந்து வவுனியா நோக்கி இந்த வெடிபொருட்கள் கொண்டு வரப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியின் உதவியுடனேயே இந்த வெடிப்பொருட்கள் வவுனியா நோக்கி கொண்டு வரப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வெடிப் பொருட்களில் 200 ஜெலட் நைட் குச்சிகளும், 200 கெப் ரோல்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத மீன்பிடி பயன்பாட்டிற்காக இந்த வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்படவிருந்தமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.