யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் இன்று ஆரம்பம்(காணொளி)

299 0

kili-uniயாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில், தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது.

நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவர்கள் தொழில்நுட்ப பீடத்திற்கு அனுமதி பெற்றுள்ளதாக யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.
யாழ் பல்கலைகழகத்தின் பத்தாவது பீடமாக தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பல்கலைகழகங்களில் யாழ்ப்பாணப் பல்கலைகழகம் மூன்றாவது நிலையில் தொழிநுட்ப பீடத்தையும் ஆரம்பித்துள்ளது.

அங்கு அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், முதலாம் வருட மாணவர்களுக்கான தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.

அடுத்த வருடம் 525 மில்லியன் ரூபா செலவில் 400 ஏக்கர் கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,  அதன் பணிகள் நிறைவுற்றதும் பெரும்பாலும் இரண்டாவம் வருட கற்கைகளை மாணவர்கள் அங்கு தொடரக் கூடியதாக இருக்கும் என்றும் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.

மேலும் கிளிநொச்சி வளாகத்தில் பதினொராவது பீடமாக விவசாய பீடத்துடன் இணைந்து விளையாட்டு விஞ்ஞான பீடத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.இந்த நிகழ்வில் தொழிநுட்ப பீடத்தின் பிடாதிபதி எஸ்.சற்குணராஜா, தொழிநுட்ப பீடங்களுக்கான தேசிய இணைப்பாளர் கலாநிதி ரி.ஏ.பியசிறி, பேராசிரியர் கே. கந்தசாமி, பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா, விவசாய பீட பீடாதிபதி திருமதி ரி.மிகுந்தன் பதில் பதிவாளர் இராஜவிசாகன் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்