திருகோணமலைத் துறைமுகத்தை கொள்ளையடிக்கவே அமெரிக்கா விருப்பம்!

260 0

tissa-vitharanaகடற்படைத் தள விரிவாக்கற் திட்டத்திற்காக, திருகோணமலைத் துறைமுகத்தைக் கொள்ளையடிப்பதற்கே அமெரிக்கா விரும்புகின்றது என முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்தப் பிரதேசத்தில் தனது போர்த் தளங்களை விரிவாக்குவதற்காக திருகோணமலைத் துறைமுகத்தைக் கைப்பற்றுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சிறீலங்காவை அமெரிக்கா வசப்படுத்தி வருகின்றது. சுமார் 400 மில்லியன் டொலர் பெறுமதியான போர் விமானங்களைக் கொள்வனவு செய்யுமாறும் வற்புறுத்தி வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.