தமிழ் நாட்டில் மீன்விலை சரிவு

257 0

fsffsfஇலங்கை இந்திய கடற்பரப்பில் அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகம் கொடுப்பதால் கடற்றொழில் ஈடுபடமுடியாதிருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்ற போதும், தமிழ்நாட்டில் பாரிய அளவான கடலுணவுப் பொருட்கள் நிரம்பல் செய்யப்படுகின்றன.

கச்சத்தீவுக்கு அருகில் கடற்றொழிலில் ஈடுபடவிடாது தாங்கள் துரத்தியடிக்கப்படுவதாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்றொழிலை புறக்கணித்திருந்த அவர்கள், கடந்த 10ஆம் திகதி முதல் மீண்டும் தொழிலை ஆரம்பித்திருந்தனர்.

தற்போது அதிக அளவான கடலுணவுப் பொருட்கள் நிரம்பல் செய்யப்படுவதால், தமிழ் நாட்டில் கடலுணவுப் பொருட்களின் விலைகளும் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.