விபத்தால் இனப் புரிந்துணர்வு

248 0

728x410_4866_accidentயாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இனபேதம் பாராது உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க உதவிய யாழ்ப்பாண மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அரச பேருந்து ஒன்றும், சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இதில் 11 பேர் பலியானதுட், இரண்ட பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தமிழர்கள் சிங்களவர்கள் மீது வெறுப்புணர்வுடன் இருப்பார்கள் என்ற நிலைப்பாட்டை தாங்கள் இந்த சம்பவத்தை அடுத்து மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.