ரோ உளவுப் பிரிவு தலைவரை இந்தியா நியமித்தது

232 0

12ரோ உளவு பிரிவின் புதிய தலைவராக அனில் தஹஸ்மனை நியமிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ரோ உளவுப் பிரிவில் தற்போது உயர் பதவியொன்றில் இருப்பவர் என இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இந்திய ளபுலனாய்வு பணியகத்தின் தலைவராக இந்திய காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய ராஜிவ் ஜெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் பிபின் ராவட,; விமானப் படைத் தளபதியாக துணைத் தளபதி எயார் மார்ஷல் பி.எஸ். தனோவா ஆகியோரை நியமிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள படைப் பிரதானிகள் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய படைப் பிரதானிகளை நியமிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.