யெமன் தாக்குதல் – பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

256 0

tkn-10-28-fr-05யெமனின் தெற்கு துறைமுக நகரான அடென் பகுதியில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் மரணித்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் பலர் அபாயமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேதனம் பெற்றுக்கொள்வதற்காக இராணுவ முகாமுக்கு அருகில் வரிசையில் நின்றுகொண்டிருந்த இராணுவ வீரர்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

ஐ எஸ் தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.