2016/ 2017ஆம் ஆண்டு கல்வியாண்டு: ஜனவரியில் கைநூல் வெளியாகும்

231 0

university-grants-commission-sri-lanka-logo_0_0-620x330“2016/ 2017ஆம் ஆண்டு கல்வியாண்டு, பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்பகுதியில் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், கைநூலானது மிகவும் தெளிவான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான கைநூலை, இணையத்தளத்திலும் பார்வையிட முடியும். பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

2015-2016 கல்வியாண்டுக்காக, இந்த புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம், பெரும் வெற்றி அடைந்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் தெளிவுபடுத்தும் நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இந்தப் புதிய திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கும் தெரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக, தெரிவு செய்யப்பட்ட 300 ஆசிரியர்களுக்கான செயலமர்வு, ஜனவரி முற்பகுதியில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.