சமாதானத்தின் போதே இலக்கியம் மேம்படும் – பிரதமர்

239 0

58f2c6567d25eafbbf381eead41633d9நாட்டில் சமாதானம் நிலவும் காலத்திலேயே இலக்கியத்தை மேம்படுத்த முடியும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மற்றும் சிங்கள இலக்கியத்துறை பெரும் வளர்ச்சியை கண்டிருந்தபோதும் யுத்தத்தின் காரணமாக அந்த துறைகள் வீழ்ச்சி கண்டன.

இறுதியாக இனவாதமும், அரசியலும் துட்டகைமுனு போன்ற பாத்திரங்களை உருவாக்குகின்ற நடைமுறைகளே பின்பற்றப்பட்டன.

எனவே, இலங்கையில் இலக்கியங்கள் மறுமலர்ச்சி பெற நல்லிணக்கம் அவசியம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.