ஒற்றையாட்சியை ஒழிக்க இடமளிக்கப்போவதில்லை – நிமல்

254 0

nimal-siripala-de-silva2இலங்கையின் ஒற்றை ஆட்சி தன்மையை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு தொடர்பில் நாட்டில் பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒற்றை ஆட்சியை ஒழிக்கவும், சமஷ்டி முறைமையை உருவாக்குவதற்கும், வடக்கு, கிழக்கை இணைப்பதற்கும், அதனை தனியான பிராந்தியமாக உருவாக்குவதற்கும், பௌத்த சமயத்திற்கான முன்னுரிமையை குறைப்பதற்கும் புதிய அரசியல் அமைப்பின் மூலம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை பொய்யான பிரசாரங்களாகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை இல்லாதொழிப்பதற்கும், பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை குறைப்பதற்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மதங்களுக்கான கௌரவத்தையும், பாதுகாப்பையும் வழங்கி ஒன்றிணைந்த இலங்கைக்குள் அனைவரும் இணைந்து செயற்படும் வகையிலான அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.