மட்டு.விநாயகர் ஆலயம் இனம் தெரியாதவர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது

278 0

dsc00103மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இனம் தெரியாதவர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் இருந்த மூல விக்கிரகம், தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் ஆலயத்தின் திரைச் சீலையை கிழித்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இனம் தெரியாத மர்ம நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆலய பூசை நிகழ்வுகளை முடித்துவிட்டு மீண்டும் நேற்று அதிகாலை ஆலயத்திற்கு சென்ற பூசகர் இச்சம்பவத்தினை கண்டு ஆலய நிர்வாகத்தினருக்கு தகவல் கூறியுள்ளார்.

நிர்வாகத்தினர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதனையடுத்து பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.