இம்மாதம் 12 – 13 ஆம் திகதிகளில் வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

252 0

புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 12 – 13 ஆம் திகதிகளில் வர்த்தக நிலை யங்களைத் திறந்து வைக்குமாறு வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை  12 ஆம் மற்றும் செவ்வாய்க்கிழமை  13 ஆம் திகதிகளில் அனைத்து சதொச வர்த்தக நிலையங்களும் திறக்கப் பட்டிருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித் துள்ளார்.

மேலும், ஏனைய வர்த்தக நிலையங்களையும் குறித்த இரு தினங்களில் திறந்து வைக்குமாறும் வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத் துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.