மனைவியின் சடலத்தை கட்டிலுக்கு கீழ் மறைத்த கணவன்

222 0

தனது மனைவியை பொல் ஒன்றினால் தாக்கி, படுகொலைச் செய்ததன் பின்னர், அவருடைய சடலத்தை கட்டிலுக்கு கீழ் மறைத்துவைத்திருந்த ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர், அந்த சடலத்தை நேற்றிரவு வேறொரு பிரதேசத்துக்கு எடுத்துச் செல்வதற்கு தயாராகி கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார்.

அவர், சாக்கொன்றில் மனைவின் சடலத்தை போட்டு கட்டி வைத்து, தயாராகி இருந்துள்ளார்.

29 வயதான பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான 35 வயதான அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் நீண்ட நாட்களாகவே தகராறு ஏற்படும் என விசாரணைகளின் ஊடாக தெரியவருகின்றது.