இந்தியா -சீனாவை இணைக்க ஒப்பந்தம்

252 0

laxman-kiriella_3இலங்கையில் சீன கைத்தொழிற்சாலைகளுடாக பொருட்களை உற்பத்திசெய்து, அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளோம் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்காக ஹம்பாந்தோட்டை முதல் மொனராகல வரை 500 கைத்தொழிற்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா இந்த கைத்தொழிற்சாலைகளைத் திறக்கவுள்ளது.இந்த கைத்தொழிற்சாலைகளுடாக பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான உடன்படிக்கையொன்றை இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ளோம் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.