இத்தாலி மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்ந்துவரும் பிரஜைகள் தமது சாரதி அனுமதி பத்திரத்தை இவ்விரு நாடுகளிலும் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இத்தாலி அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையொன்றின் மூலமே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு முதல் காலாண்டு முதல் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய உடன்படிக்கையின் ஊடாக இத்தாலியில் வாழ்கின்ற 11 ஆயிரம் இலங்கையர்கள் இதனூடாக நன்மைகளை பெற்றுக் கொள்ளவுள்ளதாக இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.