யாழ்ப்பாண பொலிசாரினால் களவு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மூவரிடமிருந்து துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் குருநகர், திருநகர் மற்றும் கல்வியங்காடு ஆகிய இடங்களைச் சேர்ந்த 21, 23, மற்றும் 25 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
களவு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட போது மூவரிடமிருந்து களவாடப்பட்ட 21 துவிச்சக்கர வண்டிகள் பொலிசாரினால் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் இன்று யாழ்ப்பாண பொலிசாரினால் ஊடகவியலாளருக்கு காண்பிக்கப்பட்டன.
அண்மைக்காலமாக யாழ்ப்பாண நகரப்பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகள் களவாடப்பட்டமை தொடர்பில் பொது மக்களால் பொலிசாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 21 துவிச்சக்கரவண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.