யாழ் சாவகச்சேரியில் விபத்து-10 பேர் பலி (காணொளி)

343 0

sequence-01-still040சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார் தெரிவிக்கின்றனர்.

இதில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிய சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய வந்த தனியார் வேன் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சங்காத்தனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த சம்பத்தில், 10 பேர் பலியானதுடன் மேலும் சில காயங்களுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வேகக்கட்டுபாடுகள் இன்றி செயற்பாட்டமையே காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.