இலங்கைக்கு விரைவில் பாரிய சிக்கல் ஒன்று ஏற்படும் – எச்சரிக்கை

286 0

champika-rபொருளாதார ரீதியில் இலங்கை பாரிய சவால் ஒன்றை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என, அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் சில கொள்கை மாற்றங்கள், இலங்கை ரூபாய்களில் பாரிய வீழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.

எனவே, இந்த சவாலுக்கு சிறந்த முறையில் முகம் கொடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை, தற்போதே மேற்கொள்ள ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிநாட்டு அமைச்சர்  மங்கள சமரவீர ஆகியோர் வியூகங்களை வகுக்க வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.