திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைப்பு

321 0

trinco-bus-16-12-2016திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் ஒருவருக்கு சொந்தமான பேரூந்து, சிவன் கோயிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் பேரூந்து முழுமையாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை கடந்த 02 ஆம் திகதி நள்ளிரவு திருகோணமலை கண்டி வீதி 4 ஆம் கட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு தனியார் பேரூந்தும் தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.