மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிப்பு

267 0

25மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பாதுகாப்பான முறையில் புலம்பெயர்ந்து செல்வதன் மூலம் எமது பாதுகாப்பை உறுப்படுத்திக்கொள்வோம் என்னும் தலைப்பில் இவ்வருடம், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

பாதுகாப்பான புலம்பெயர்தலை தடுப்பதுடன் மனித வியாபாரத்தை தடுப்பதை நோக்காக கொண்டு இந்த தினத்தின் செயற்பாடுகள் முன்கொண்டு செல்லப்படுகின்றன.

மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை ஜரோன் டி லிமா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஏ.எல்.எம்.சத்தார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வின்போது சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்வதை தடுத்தலையும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு முறையான பயிற்சிகளுடன் செல்லவேண்டும் என்பது தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் முறையான வகையில் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு அரசாங்கம் வழங்கும் பல்வேறு அனுகூலமான திட்டங்கள் தொடர்பிலும் இன்றைய நிகழ்வில் தெளிவூட்டப்பட்டன