அந்தமான் தீவுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்

267 0

01அந்தமான் தீவுக்கு கிழக்கே ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக மாறி, சென்னையில் கரையை கடந்தது.

இதன், தொடர்ச்சியாக வளி மண்டல மேலடுக்கில் நிலவும் காற்று சுழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் ஒரு காற்றழுத்தம் நேற்று மாலை உருவாகியுள்ளதாகவும் இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த நான்கு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில் அஸ்ரி’ என்று அழைக்கப்படும் என்றும், குறித்த பெயர் இலங்கையால் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.