இலங்கை அகதி கைது

382 0

03-1464899154-03-arrest-logo-600தமிழ் நாட்டின் – திருமங்கலத்தில் உள்ள அரச வைத்தியசாலையுள் பிரவேசித்து, அதன் அதிகாரிகளை தாக்க முற்பட்டதாக தெரிவித்து, இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமங்கலம் – உச்சப்பட்டி அகதி முகாமில் வசித்து வந்த அகதி ஒருவரே இவ்வாறு கைதானார்.
குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரை தடுப்பதற்கு வைத்தியசாலையின் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.
இதன்போது அதிகாரிகளை அவர் தாக்கியதாக காவற்துறையில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக திருமங்கலம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.