அவுஸ்திரேலியாவை சோதிக்கும் இலங்கை அகதிகள்

482 0

Srilankhaஅவுஸ்திரேலியாவில் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அகதிகள் விடயத்தை எவ்வாறு கையாளும் என்பதை சோதிக்கும் முயற்சியில் ஆட்கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இதன் நிமித்தம் 10 தொடக்கம் 12 ஈழ அகதிகள் அடங்கிய படகு ஒன்றை தமிழ் நாட்டில் இருந்து அனுப்ப உத்தேசித்திருப்பதாக கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் புலனாய்வுத் தகவல்களை ஆதாரமாக கொண்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் அவுஸ்திரேலியாவை சென்றடையவுள்ள குறித்த அகதிகளின் படகினை அவுஸ்திரேலிய அதிகாரிகள் எவ்வாறு கையாள்கின்றனர் என்பதன் அடிப்படையில், மேலும் பல அகதிகள் அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.