மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தலதா அதுகோரல

279 0

6531eb075b3c378f151c7708706c839aமஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து தனக்கு எதிராக கையூட்டல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட காப்புறுதி திட்டத்தினூடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அரசாங்கத்துக்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக மஹிந்த அணியினரால் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடி அடிப்படையற்றது என்று அவர் கூறியுள்ளார்.