பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்னவிற்கும் இடையில் விசேட சந்திப்பு (காணொளி)

320 0

ranil-meetபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்னவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர் மீது அண்மையில் கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன தாக்குதல் நடாத்தியிருந்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து கடற்படை தளபதிக்கு எதிராக ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி புத்திஜீவிகளும் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்திருந்தனர்.இந்த நிலையிலேயே கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.