மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று மோதியதில் யானைக்குட்டி ஒன்று காயமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், காயமடைந்த யானைக்குட்டியை கிளிநொச்சியில் உள்ள வனஜீவராசிகள் மருத்துவப்பிரிவின் அலுவலகத்திற்கு கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆறு தொடக்கம் ஏழு மாதமேயான குறித்த யானைக்குட்டியின் இடுப்புப்பகுதி விபத்தில் உடைந்துள்ளதாக வனஜீவராசிகள் மருத்துவப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.