இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறுகோரி தொழிற்சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

312 0

cebஇலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறுகோரி இன்று யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினால் இன்று மதியம் அடையாளமாக 1 மணிநேரம் தமது ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி பதாகைகளுடன் போராட்டம் நடாத்தியுள்ளனர்.

நாடுபூராகவும் மின்சாரசபை அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டங்களை நடாத்தி வருவதாக தொழிற்சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

தமது மின்சார சபை ஊழியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கிடைக்கா விட்டால் ஜனவரி மாதம் 4ஆம் திகதி கொழும்பு மின்சாரசபை அலுவலகத்திற்கு முன்பாக சகல வடக்குத் தெற்கு இணைந்த போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக தொழிற்சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.