சபைக்கு அழைக்கப்படமாட்டார் ரஞ்சன் ராமநாயக்க – சபாநாயகர்

222 0

நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறுவதால் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அனுமதிக்கப்பட மாட்டார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது, ரஞ்சன் ராமநாயக்கவை நாளை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்தே சபாநாயகர் இவ்வாறு கூறினார்.

கொலைக் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற பிரேமலால் ஜெயசேகர மேன்முறையீட்டின் அடிப்படையில் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதேவேளை கொலைக் குற்றவாளியை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிப்பதன் மூலம் சபாநாயகர் நாட்டில் ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்கியுள்ளார் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.