யுத்தத்தை ஏற்படுத்த வழிகோலும் இன மத குழுக்கள்

345 0

ranathungaயுத்த வடுக்களில் இருந்து மீட்சியடையாத இந்நாட்டில் மீண்டுமமொரு யுத்தத்தை ஏற்படுத்த வழிகோலும்  இன மத குழுக்கள் எம்மிடையே இருப்பது இந் நாட்டின் துரதிஸ்டமாகும் என, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கிராமத்து விகாரையே கிராமத்தின் சக்தி எனும் வேலைதிட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக் கருத்தை வெளியிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக போதிய விளக்கமின்றி  சிலர் மேற்கொள்கின்ற கருத்துக்கள் காரணமாக இன்று இனங்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டில் இன, மத பாகுப்பாடுகளை தூண்டுபவர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள்.  அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் எவ்வித முடிவுகளும்   தற்போது மேற்கொள்ளப்படவில்லை. பல்வேறுபட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் எவ்விதமான இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

பௌத்தர்களை போன்றே பிற மதத்தவர்களும் செயற்படுகின்றார்கள். அரசியல் யாப்பினை பற்றி அறியாத நம் நாட்டு மக்களின் மனங்களை குழப்பாதிருக்குமாறு நான் இவர்களிடம் கோருகின்றேன் என்றார்.