திருகோணமலைச் சிறையில் தமிழ்க் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!

371 0

201612070351061775_saudi-arabia-sentences-15-iranian-spies-to-death_secvpfதிருகோணமலைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த கே.பரமேஸ்வரன் (வயது – 30 வயது) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் இரவு 7.00 மணியளவில் குறித்த கைதி சிறைச்சாலை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதெனவும், பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.