அம்பாறையில் தாயும் மகனும் வெட்டிக் கொலை

245 0

அம்பாறை வராப்பிட்டிய பகுதியில் தாய் மற்றும் சிறுவன் தமது வீட்டுக்குள் இன்று(01) வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண் மற்றும் 10 வயதுடைய சிறுவன் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், கொலையாளி குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.