மட்டக்களப்பில் விபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி!

249 0

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடியில் வசிக்கும் இராமகிருஷ்ணன் மயூரன் (வயது 27) எனும் இந்த இளைஞன், சந்திவெளியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, மாவடிவேம்பு பகுதியில் வைத்து எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டு, படுகாயங்களுக்குள்ளான நிலையில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

மாவடிவெம்பு பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.