வடக்கில் நேற்று 15 பேருக்கு கொவிட்-19 தொற்று

270 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 15 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் ஒருவர், மன்னாரில் இருவர்,வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் 10 பேர்,
ஜம்புகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவர்,

கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் ஒருவர் என 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.