சபையில் சங்கடத்துக்குள்ளான விமல் வீரவன்ஸ!

252 0

9d9cdc2afa1d747640275fbe117b5459_xlவீதி அபிவிருத்தி எனும் பெயரில் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடியுங்கள் பரவாயில்லை. ஏனெனில், வீதியாவது மிஞ்சும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக இன்னும் 5 அல்லது 6 வருடங்களின் பின்னர், வருமானத்தை ஈட்டிக்கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டினார்.

இதன் போது அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்தும் முன்வைத்து வந்த நிலையில், குறுக்கிட்ட, ஹெக்டர் அப்புஹாமி எம்.பி, உங்களுடைய மாளிகையில், 24 வயதான இளைஞன் எப்படி இறந்தார் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவைச்சேர்ந்த அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

 இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு கையாலே, தலங்கம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய கொள்ளவே இவ்வாறு செய்யப்பட்டது.

இதன் போது குறுக்கிட்ட சர்வதேச வர்த்தக இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, அந்த இளைஞன் இறந்தானா? அல்லது கொல்லப்பட்டனா? என்று கேட்டார். தனதுரையை தொடர்ந்த விமல் வீரவன்ச, எது உண்மை, எது பொய்யென்று தெரியவரும்.

அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வாவும் சிரிக்கிறார். அமைச்சர் ஜோனும் சிரிக்கிறார். இன்னும் சிலர் சிரிக்கின்றனர். இந்த அரசாங்கம் நீண்ட நாட்களுக்கு பயணிக்காது என்று தெரிந்துகொண்டுதான் அவர்கள் சிரிக்கின்றனர்.

நல்லாட்சி எனும் பெயரில் நீங்கள் எல்லோரும் கழிவு குழிக்குள் விழுந்துவிட்டீர்கள், தயவு செய்து மக்கள் தூக்கிவிடும் முன்னர் நீங்கள் எழுந்து வாருங்கள் என்று கேட்டுக்கொண்டு தனது உரையை முடித்துகொண்டார்.

அதன் பின்னர் உரையாற்றிய, எம்.பியான நலின் பண்டார ஜயமான, அலைபேசி கடையை வைத்திருந்தவர் இன்று மாளிகையில் வசிப்பது எப்படி?, அந்த மாளிகையில், 24 வயதான இளைஞன் சடலமாக மீட்கப்பட்டமை எப்படி?

தனக்கு முடியாததை, அந்த இளைஞனை கொண்டே, நிறைவேற்றியுள்ளார். அதுவும் வயகரா கொடுத்தே, அதனை நிறைவேற்றியுள்ளீர்கள். வயகரா எப்படி? எப்படி? என்று கேட்டார்.

கள்ள பாஸ்போட் வைத்திருந்த அவ்வாறானவர்களை, அதாவது தும்முல்ல வன்சவுக்கு பின்னர் உரையாற்றுவதையிட்டு நான் பெருமையடைகின்றேன் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.