பெண் சடலமாக மீட்பு

273 0

capture3மஹியங்கனை – லோக்கல்லா ஓயா பாலத்திற்கு அருகில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் வேளையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், 54 வயதான பிபிலை – வேகம பிரசேத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.