இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

279 0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும், இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும் மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையின் 62 வயதுடைய ஆண் கைதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.