ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயப்படுத்த எதிர்ப்பு

232 0

ooooooooooஆனையிறவு – குறிஞ்சாதீவு உப்பளங்களைத் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆனையிறவு உப்பளத்துக்கு முன்னால் இன்று காலை 9.30 அளவில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

குறித்த உப்பளங்களின் சுற்றியல் கிராம அமைப்புகள் இதற்கான ஒழுங்கை மேற்கொண்டிருந்தன.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் பங்கேற்றிருந்ததுடன், ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் அமைச்சர் மற்றும் கண்டாவளை பிரதேச செயலார் ஆகியோருக்கான மனுக்களும் கையளிக்கப்பட்டன.