8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டது ஐகோர்ட்டின் தீர்ப்பு ரத்தாக காரணம் ஆகிவிட்டது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக மத்திய பா.ஜ.க அரசும், அ.தி.மு.க. அரசும் கூட்டணி வைத்துச் செயல்பட்டு வளர்ச்சி என்ற போர்வையில் விவசாயிகளை வஞ்சிக்கும் முயற்சியில் தற்போதைக்கு வெற்றி பெற்றிருந்தாலும், இரு அரசுகளுக்கும் மக்கள் மன்றம் உரிய பாடத்தை வாக்குச் சீட்டு மூலம் நிச்சயம் கற்பிக்கும்.
விவசாயிகளின் நலனைத் துச்சமென நினைத்து, ‘கமிஷன்’ என்ற ஒரே நோக்கத்தில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த அராஜகமாக காவல் துறையைப் பயன்படுத்தி, விவசாயிகளின் மீது தடியடி நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இனியேனும் விவசாயிகளின் நலன் காத்திட முன் வருவாரா? விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தவேண்டுமே தவிர, மீண்டும் இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக்கூடாது.
ஆகவே சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடவேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இது மத்திய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்கக்கூடாது. கைவிட்டு விட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வரவேண்டும் என்றே விவசாயிகள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.