50 வருடத்தில் பதுளையில் உயிர் வாழ முடியாது

257 0

trainபதுளை மாவட்டத்தில் இடம்பெறும் சுற்றாடல் மாசு காரணமாக எதிர்வரும் 50 வருடங்களுக்கு மாத்திரமே அங்கு வாழும் சூழல் நிலவும் என பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்கால அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

காடுகளுக்கு தீவைத்தல் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட பாரிய சுற்றாடல் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், நிலமை மேலும் மோசமடையும் எனவும் பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி குறிப்பிட்டார்.