5 இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

294 0

80084eaf8b85176aa0b37147a984dc9c9fb-415x260யாழ்ப்பாண பிரதேசத்தில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்கள் மற்றும் கையடக்க தொலைப்பேசிகள் சிலவும் இதன் போது கைப்பற்றப்பட்டதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம், திருநெல்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.